 |
|
புதுப்படப்பாடல்
|
|
Computer Company
திருநெல்வேலி
தமிழ்நாட்டில் உள்ள 6 மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சியும் ஒன்று. 1790 ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 6,816 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாநகரம் விவசாயத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரைச் சுற்றி நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது.
சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்தான் தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை நகர் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் பெயர் பெற்ற இடம் பாளையங்கோட்டை.
|
|
|
|
ஷேன் வார்னேவுக்குப் பின் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர், என்ற பெருமையை பெற்றுள்ளார் இலங்கையின் முத்தையா முரளிதரன்.
வங்கதேச அணியின் சார்பில் ஆடிய செய்யத் ரசேலின் விக்கெட்டை கைப்பற்றி தனது 700 வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் இலங்கை அணியின் ஸ்பின்னர் பவுலரான முத்தையா முரளிதரன்.
இந்த டெஸ்ட்டின் ஒவ்வொரு இன்னிங்ஸ்சிலும், முத்தையா முரளிதரன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிங்ஸ் தோல்வியடைந்த வங்கதேசம்
வங்கதேச அணிக்கு கடந்த 2000 ம் ஆண்டு டெஸ்ட் மேட்ச் அந்தஸ்து கிடைத்த பின்னர், 49 போட்டிகளில் விளையாடியதில் அடைந்துள்ள 43 வது தோல்வி இதுவாகும்.5 போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், ஷிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி வங்கதேசம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|